கதை கவிதை கட்டுரை - அவ்வையாரின் ஆத்திச்சூடிEpisode 2

கதை கவிதை கட்டுரையின் முதல் தலைப்பு அவ்வையாரின் ஆத்திச்சூடி. ஆத்திச்சூடி விளக்கம் – உயிர் வருக்கம்1. அறம் செய விரும்புதருமம் செய்ய ஆசைப்படு.2. ஆறுவது சினம்கோபம் தணிய வேண்டியதாகும்.3. இயல்வது கரவேல்உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து வைக்காமல் வறியவர்க்கு கொடு.4. ஈவது விலக்கேல்தருமத்தின் பொருட்டு ஒருவர் மற்றோருவருக்கு கொடுப்பதை தடுக்காதே5. உடையது விளம்பேல்உன்னுடைய பொருளையோ அல்லது இரகசியங்களையோ பிறர் அறியுமாறு சொல்லாதே.6. ஊக்கமது கைவிடேல்முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது.7. எண் எழுத்து இகழேல்கணித நூல்களையும் அற நூல்களையும் இலக்கண நூலையும் இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.8. ஏற்பது இகழ்ச்சியாரிடமும் எதையும் யாசிக்க கூடாது அது இகழ்ச்சி ஆகும்.9. ஐயம் இட்டு உண்யாசிப்பவருக்கு(ஊனமுற்றோர்) கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.10. ஒப்புரவு ஒழுகுஉலக நடைமுறையை அறிந்துகொண்டு, அதனுடன் வாழ கற்றுக்கொள்.11. ஓதுவது ஒழியேல்நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.12. ஔவியம் பேசேல்ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.13. அஃகம் சுருக்கேல்அதிக இலாபத்துக்காக தானியங்களின் எடையை, குறைத்து விற்காதே.Check out my latest episode!

2356 232