Ep 6 Annai Therasa - Did Mother Teresa come to convert religion ? | Writer Muthukrishnan | Hello Vikatan
கல்விப்பணியில் ஈடுபட்டுக்கொண்டே சமூக பணிகளையும் செய்து வந்தாலும் அன்றைய கல்கத்தா நகரில் வாழ்ந்து வந்த விளிம்பு நிலை மக்களின் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத அவல வாழ்வு, அன்னை தெரஸாவுக்குள் அவர்களின் வாழ்வை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது . மேலும் 1946 ஆண்டில் கல்கத்தாவில் ஏற்பட்ட மத கலவரம் பெரும்பாலான எளிய மக்களின் வாழ்வை சீர் குலைத்திருந்தது . ஆசிரியப் பணியில் இருப்பதால் சமூகப்பணியை முழு வீச்சோடு செய்யவில்லை என்பதை உணர்ந்த அன்னை தெரேசா முழுவதுமாக சமூகப்பணியில் ஈடுபடும் பொருட்டு ஆசிரியப்பணியில் இருந்து விலகுவது என முடிவெடுத்தார் ... 1948 ஆம் ஆண்டு ஆசிரியப்பணியில் இருந்து விலகி முழுநேர சமூகசேவையாளராக தனது பணியை தொடர்ந்தார் ......#annaiterasa #Tamilpodcast #Tamilstories #HistoryHosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat